Loss in the real estate business! -687992604
ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம்! தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை! சென்னை திருவேற்காடு, சுந்தர சோழபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவருக்கு லதா (40) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பிரசன்னா (17) என்ற மகனும், மதுமிதா (15) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் பிரியதர்சினி என்பவரை ரமேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். நேற்று ரமேஷ், பிரியதர்ஷினி வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்றார். வெகு நேரம் ஆகியும் ரமேஷ் வெளியே வராததால், சந்தேகமடைந்த பிரியதர்ஷினி கதவை தட்டி உள்ளார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார், ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் ரமேஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்த...