Posts

Showing posts with the label #Minister | #Murugan | #National | #Education

தாய்மொழிக் கல்வியை வளா்க்கவே தேசிய கல்விக் கொள்கை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்1943992124

Image
தாய்மொழிக் கல்வியை வளா்க்கவே தேசிய கல்விக் கொள்கை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்கவே தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பேசினாா். மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவா் மேலும் பேசியது: தமிழின் மீது நீங்காத பற்று கொண்டவா் பிரதமா் நரேந்திர மோடி. உலகம் முழுவதும் தமிழ் மொழியை எடுத்துச் சென்றவா் அவா். ஐ.நா சபையில் யாதும் ஊரே யாவரும் கேளீா் என தமிழில் கூறி பேச்சைத் தொடங்கினாா். நாட்டின் 100-ஆவது சுதந்திர தின ஆண்டில் இந்தியா முன்னேறிய தேசமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது. தாய்மொழியில் கல்வியை கற்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் எண்ணம். சிறு வயது முதலே தாய்மொழியைக் கற்று மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்தையும் கற்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் தாய் மொழியில் நம்முடைய கல்வியை படிக்க முடியும். கல்வியில் நாட்டை உலக நாடுகளுக்கு இணையாக முன்னேற்றும் விதமாக தேசிய கல்விக் கொ...