ஐபிஎல் 2022: வார்னேவுக்கு மரியாதை; புதிய ஜெர்சியில் களமிறங்கும் ராஜஸ்தான்!



ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், சாம்பியன்  பட்டத்தை பெற்றுத்தந்தவருமான மறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இன்று நடக்கும்  ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் வித்தியாசமான ஜெர்ஸியில் களமிறங்குகிறார்கள்

கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் தொடங்கப்பட்டபோது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக ஷேன் வார்ன் நியமிக்கப்பட்டு, முதல் முறையிலேயே சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக்கொடுத்தார். லெக்ஸ்பின்னில் ஜாம்பவானான ஷேன் வார்ன் கடந்த மார்ச் 4ஆம் தேதி தாய்லாந்தில் சுற்றுலா ஓய்வுநாட்களை கழிக்கச் சென்றபோது உயிரிழந்தார். 

ஐபிஎல் 2022: கோலி, படித்தர் அரைசதம்; குஜராத்துக்கு 171...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog