மஞ்சப்பை இயந்திரம் ரெடி: காசு போட்டா பை வரும்!


மஞ்சப்பை இயந்திரம் ரெடி: காசு போட்டா பை வரும்!


சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஆனாலும் பிளாஸ்டிக் பயன்பாடு ஓயவில்லை.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு டிம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழக முதல்வரின் மஞ்சள் பை திட்டம் குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

பிளாஸ்டிக்கை ஒழிக்க கொண்டுவரப்பட்டுள்ள இந்த ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம் தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சைக்கிள் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் அரசால் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. மஞ்சப்பை பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் பணிகளில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது.

குறிப்பாக, தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்தின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ, மீண்டும் மஞ்சள் பை திட்டத்தில் மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகிறார். விமான நிலையம் உள்ளிட்ட எங்கு சென்றாலும் மஞ்சள் பையை எடுத்து சென்று அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவுடன் கூடிய பதிவில், “மஞ்சப்பை விற்பனை இயந்திரம் இறுதியாக விட்டது. பொது இடங்களில் மலிவு விலையில் துணி பைகள் கிடைப்பது சவாலாக உள்ளது. சந்தை, பேருந்து நிறுத்தங்கள் போன்ற பொது இடங்களில் இவற்றை வைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

மஞ்சள் பை கொடுக்கும் இயந்திரத்தில் ரூ.10 நாணயத்தை செலுத்தினால், மீண்டும் மஞ்சள் பை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட துணிப் பை வருகிறது. அந்த இயந்திரத்தில் 40 பைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “மஞ்சள் பை தொடர்ச்சியாக கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு சிலருடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனை நிரந்தர அம்சங்களாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை, மக்கள் தங்கள் சொந்த பைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.” என்று சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.

தாய்ப்பாலில் விஷம்: அமைச்சர் சொன்ன உவமை!
முன்னதாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் மீண்டும் மஞ்சள் பை என்ற திட்டத்தின் அடுத்த கட்டமாக பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மஞ்சள் பை விநியோகம் செய்யக்கூடிய பணிகள் நடைபெற்று வருவதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத்துறை அமைச்சர் சிவி மெய்யநாதன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

Chandrababu Naidu\'s letter to the Chief Minister of Tamil Nadu to stop the smuggling of ration rice !!-1041417413

The Bodybuilding Pump Sesh for a Truly Massive Summer #Summer